Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் சாவில் சந்தேகம்: தாய் புகார்

மகள் சாவில் சந்தேகம்: தாய் புகார்

மகள் சாவில் சந்தேகம்: தாய் புகார்

மகள் சாவில் சந்தேகம்: தாய் புகார்

ADDED : ஜூலை 07, 2024 04:04 AM


Google News
கடலுார்: பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டைச் சேர்ந்தவர் மதியழகன் மகள் குணவதனி, 37; இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர், கடலுாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்தோஷ்குமார், 45; என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடலுார், திருப்பாதிரிபுலியூர் சரவணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த குணவதனி துாக்கு போட்டுக் கொண்டார். உடன் குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குணவதனி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து அவரது தாய் வசந்தகுமாரி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us