Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

விருதை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

விருதை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

விருதை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

ADDED : ஜூன் 20, 2024 08:47 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டருக்கு, உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 1,500 பேர் வெளி நோயாளிகளாகவும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். பச்சிளம் சிசு பராமரிப்பு, மகப்பேறு, முடநீக்கியல், பொது மருத்துவம், கண், காது, மூக்கு, பல், சித்தா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மகப்பேறு, முடநீக்கியல் பிரிவுகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. கிராமப்புற நோயாளிகள் நலன் கருதி தற்போது, 9.40 கோடி ரூபாயில், லிப்ட் வசதியுடன் கூடிய ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அறுவை சிகிச்சைகளை அதிகரிக்கும் வகையில், கூடுதலாக அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜிடம், முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, சீர்காழி அர்ப்பனா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அய்யப்பன், காரைக்கால் ஓ.என்.ஜி.சி., நிர்வாகத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அறுவை அரங்க லைட்டுகள், இயந்திரங்கள், டேபிள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை பெற்று, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒப்படைத்தார்.

முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், அறுவை அரங்க உதவியாளர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us