ADDED : ஜூன் 20, 2024 08:47 PM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே முதியோர் இல்லத்திற்கு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் மாணவர்கள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் பொருளியல் துறையில், 1994-96 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி முதியோர் இல்லத்தில், ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, துணிமணிகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் பிச்சைபிள்ளை, முன்னாள் மாணவர்கள் கருணாகரன், பிரபாகரன், கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.