ADDED : ஜூன் 29, 2024 05:53 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஐயனார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது, கச்சிபெருமாநத்தம் மணிமுக்தாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த சேகர், 49; ஆனந்த், 43, என தெரிந்தது. உடன் இருவரையும் கைது செய்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.