ADDED : ஜூலை 29, 2024 04:43 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நரிமேடு கெடிலம் ஆற்றில் கீழ்மாம்பட்டு திருமால்,44;அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தி வந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து திருமாலை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.