Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : ஜூன் 02, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுாரில் பிரதான சாலை சென்டர் மீடியனில் மணல் குவியலால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கடலுார் மாநகரத்தின் பிரதான போக்குவரத்து பகுதியாக பாரதி சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையின் சென்டர் மீடியன் இருபுறங்களிலும் மணல் அதிகளவில் குவிந்துள்ளது.

இங்குள்ள மணல் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கண்களை கசக்கியப்படி, செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதனால், சில வாகன ஓட்டிகள் மணலில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி பாதிப்படைகின்றனர்.

எனவே, சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us