ADDED : ஜூலை 30, 2024 11:20 PM

கடலுார் : குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் மாவட்ட மா.கம்யூ., செயலாளர் மாதவன் தலைமையில் கொடுத்துள்ள மனு;
லால்பேட்டை ஏரிக்கரை மெயின் ரோடு, சாவடியில் பத்துக்கும்மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் அரசு புறம்போக்கில் மூன்று தலைமுறையாக, 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். வீட்டு வரி ரசீது மற்றும் பொதுப்பணித்துறைக்கு வாடகை கட்டியுள்ளனர். இந்த இடம் நீர்த்தேக்கம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறது. எனவே, அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கவும், ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.