Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காட்டுமன்னார்கோவில் பகுதியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

ADDED : ஜூன் 09, 2024 03:57 AM


Google News
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.

காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் சுல்லென வெயில் தாக்கியது. மாலை 3:00 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்ந்து, மழை பெய்ய துவங்கியது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த மழையால், காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் தண்ணீர் ஓடியது.

இதனால் காலை முதல் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us