ADDED : ஜூலை 18, 2024 11:15 AM

கடலுார்:கடலுார் புனித கார்மேல் அன்னை ஆலய திருவிழாவில் பெரிய தேர்பவனி நடந்தது.
கடலுார் புனித கார்மேல் அன்னை ஆலயத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறிய தேர்பவனி, திருப்பலி நடந்தது.நேற்று முன்தினம் காலை, மாலை திருப்பலி, பெரிய தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கொடியிறக்கம் நடந்தது.