Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ படகு சவாரி செய்ய ஆன்லைன் புக்கிங் வசதி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அசத்தல்

படகு சவாரி செய்ய ஆன்லைன் புக்கிங் வசதி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அசத்தல்

படகு சவாரி செய்ய ஆன்லைன் புக்கிங் வசதி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அசத்தல்

படகு சவாரி செய்ய ஆன்லைன் புக்கிங் வசதி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அசத்தல்

ADDED : ஜூன் 03, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், படகு சவாரிக்கு காத்திருப்பதை தவிர்க்க, ஆன் லைனில் படகு சவாரிக்கு புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சா வரத்தில் உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, மாங்கு ரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் பல்வேறு மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ள தால், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்கின்றனர்.

பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனக்காடுகளை சுற்றி பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவும், படகு சவாரி செய்யவும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

இதனால், சுற்றுலா பயணிகளுக்கு காலவிரையமும், கூட்ட நெரிசலில் சிக்கியும் வந்தனர். தற்போது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு சவாரி செய்ய ஆன் லைன் புக்கிங் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே புக்கிங் செய்து கட்டணம் செலுத்தி கொள்ளலாம். அதைதொடர்ந்து, அவர்களுக்கு படகு சவாரி செய்ய எந்த நேரத்திற்கு வர வேண்டும் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வந்துவிடும். இந்த நடைமுறை சில நாட்களாக நடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

படகு சவாரி செய்ய முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்தால்போதும் என, மேலாளர் பைசல் அகமது தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us