ADDED : ஜூன் 02, 2024 05:39 AM
குள்ளஞ்சாவடி: குறிஞ்சிப்பாடி அருகே ரயில் மோதி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடலுார் மற்றும், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தண்டவாளத்தில், 45 வயது மதிக்கத்தக்க நபர், ரயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்மோதி இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
தகவலின்பேரில் கடலூர் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என விசாரித்து வருகின்றனர்.