தமிழ் பேரவையின் இலக்கிய சந்திப்பு
தமிழ் பேரவையின் இலக்கிய சந்திப்பு
தமிழ் பேரவையின் இலக்கிய சந்திப்பு
ADDED : ஜூன் 02, 2024 05:38 AM
புவனகிரி: புவனகிரி தமிழ் பேரவை சார்பில் 134 வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பேரவை செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை செயலர் கிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் பாஸ்கரன் தலைமையில், சாதனைகளை வென்ற சிறந்த காப்பியத் தலைவியில், நம் நெஞ்சில் பெரிதும் உயர்ந்து நிற்பவர் கண்ணகியா, சீதையா என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. பேரவை பொருளாளர் ஜெகன் நன்றி கூறினர்.
நிகழ்ச்சியில் சுற்றுபகுதியினர் திரளாக பங்கேற்றனர்.