Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

ADDED : ஜூன் 25, 2024 04:54 AM


Google News
கடலுார், : கடலுாரில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்குகிறார். மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்கலாம்.

கூட்ட அரங்கில் கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8:00 மணிமுதல் 10:00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ளலாம்.

இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us