ADDED : ஜூலை 12, 2024 05:59 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறைசார்பில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை தாங்கினார்.
துணை மேயர் தாமரைச்செல்வன், நகர் நல அலுவலர் எழில் மதனா முன்னிலை வகித்தனர். மேயர் சுந்தரி ராஜா முகாமை துவக்கி வைத்தார்.
புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.