ADDED : ஜூன் 06, 2024 02:54 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அண்ணாநகர் கபிலர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், 63, என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்தனர்.