ADDED : ஜூலை 14, 2024 11:18 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி,மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கெளமாரி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர்.வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
அம்மன்களுக்கு நவராத்திரி கொண்டாடுவது போல் வராஹிக்கு ஆஷாட நவராத்திரி நடப்பது சிறப்பாகும்.
வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜைகள் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது.தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் மாலையில் 1008 சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையும் நடந்து வருகிறது. பூஜைகளை ராமு பூசாரி செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு விளக்கு பூஜை நடந்தது.இன்று 15 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும்,16 ஆம் தேதி வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.