/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு; கைதான இருவரின் வங்கி கணக்குகள் முடக்கம் சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு; கைதான இருவரின் வங்கி கணக்குகள் முடக்கம்
சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு; கைதான இருவரின் வங்கி கணக்குகள் முடக்கம்
சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு; கைதான இருவரின் வங்கி கணக்குகள் முடக்கம்
சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு; கைதான இருவரின் வங்கி கணக்குகள் முடக்கம்
ADDED : ஜூன் 20, 2024 08:51 PM
சிதம்பரத்தில் பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள மீதிகுடி - கோவிலாம்பூண்டி சாலையோரம், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் போலீசார் சென்று, சான்றிதழ்களை கைப்பற்றினர். அவைகள் அனைத்தும் போலி சான்றிதழ் என தெரிந்தது.
விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் ,37; மீதிகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன்,48; ஆகியோர், போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகர் (பொறுப்பு) கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, சங்கர், நாகப்பன் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், லேப்டாப், மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களையும் பறிமுதல் செய்தனர்.
வங்கி கணக்குகள் முடக்கம்
கைதான இருவரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், கர்நாடக பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி பெயரில் பட்டமளிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்துள்ளனர்.
வேலைக்கு செல்பவர்கள், வெளிநாடு செல்பவர்களுக்கு விற்பனை செய்து, கோடிக்கணக்கில் பணம் பார்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் சான்றிதழ் அவர்கள் விற்பனை செய்திருக்கலாம் என்றும், அதன் மூலம் சுமார் ரூ. 4 கோடி வரையில் பணம் கைமாறி இருக்கலாம் என, கூறப்படுகிறது. அதையடுத்து, இருவரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
முற்றிய குற்றவாளிகளுக்கு வலை
கைதான சங்கர், நாகப்பன் இருவரும் கம்யூட்டர் சைன்ஸ் படித்தவர்கள் என்பதும், அதில் நாகப்பன், பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் 3 முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
-நமது நிருபர் குழு-