ADDED : ஜூலை 21, 2024 06:24 AM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அருகே கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்
மந்தாரக்குப்பம் அடுத்த கொம்படிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 33. இவரது கணவர் பெருமாள், 38. இவர் கடந்த 15 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை.
மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.