ADDED : ஜூன் 11, 2024 06:27 AM

வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே கோ. சத்திரம் புதுார் கிராமத்தில் அ.தி.மு.க .தகவல் தொழில்நுட்ப பிரிவு விழுப்புரம் மண்டல இணை செயலாளர் ராதாகிருஷ்ணன்- ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா ராதா கிருஷ்ணன் இல்ல புதுமனை புகு விழா நடந்தது.
அ.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சம்பத் (வடக்கு), அருண்மொழிதேவன் (மேற்கு), பாண்டியன் (கிழக்கு), முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செல்வி ராமஜெயம், அமைப்பு செயலாளர் முருகமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராய் சத்யன், சிங்கை ராமச்சந்திரன், இணை செயலாளர் நிர்மல்குமார், கோவை சத்திரியன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல். ஏ.க்கள் சிவசுப்ரமணியன், சத்யா பன்னீர்செல்வம், சிவக்கொழுந்து, பா.ஜ., நிர்வாகி தங்கவேல், பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க சூரியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஞானசெல்வி கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியன்,பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சகன், மீனவரணி தங்கமணி, மருத்துவரணி சீனிவாசராஜா பங்கேற்றனர்.
மேலும், பேரவை துணை செயலாளர்கள் அருளழகன், பாலமுருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், பேரவை செயலாளர் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி கார்த்திகேயன், ஒன்றிய சேர்மன்கள் கலையரசி, ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்த ராஜ், கமலக்கண்ணன், பாஷியம், வினோத், நகர செயலாளர் கோவிந்தராஜ், பாபு, முருகன், ஆனந்த பாஸ்கர், சந்திரகுமார் பங்கேற்றனர்.