Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அதிவேக செல்லும் வாகனங்கள்; பள்ளி மாணவர்கள் அச்சம் 

அதிவேக செல்லும் வாகனங்கள்; பள்ளி மாணவர்கள் அச்சம் 

அதிவேக செல்லும் வாகனங்கள்; பள்ளி மாணவர்கள் அச்சம் 

அதிவேக செல்லும் வாகனங்கள்; பள்ளி மாணவர்கள் அச்சம் 

ADDED : ஜூன் 16, 2024 10:39 PM


Google News
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் அதிவேக செல்லும் வாகனங்களால் பள்ளி அருகே எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் கடைவீதியில் என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பஸ்ஸில் வரும் மாணவர்கள் பள்ளி எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி ரோட்டை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். அப்போது அவ்வழியாக அதிவேக வாகனங்கள் செல்லும் போது மாணவர்கள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியமால் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி பள்ளி நேரத்தில் போலீசார் உதவியுடன் மாணவர்கள் சாலையை கடக்க உதவ வேண்டும். மேலும் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் எச்சரிக்கை சிக்னல் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us