ADDED : ஜூன் 22, 2024 04:57 AM
கடலுார் : கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டருக்கு திடீர் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலுார், புதுநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குருமூர்த்தி. இவருக்கு, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு கடலுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் பலனாக இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.