Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு

ADDED : ஜூலை 04, 2024 11:43 PM


Google News
கடலுார்: கடலுார் அருகே சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவால், புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் முதுநகர் சிப்காட் வளாகத்தில், தனியார் மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் திடீரென புகைமூட்டம் வந்தது. இந்த புகை குடிகாடு-கடலுார், சிதம்பரம் சாலையில் பரவியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், தொழிற்சாலையில் இருந்த ஒரு ரசாயனம் கசிவானதால் புகைமூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us