புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
ADDED : மார் 14, 2025 05:34 AM

திட்டக்குடி: பவுர்ணமியையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் வரதராஜ பெருமாள், தாயார் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.