/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டேங்கர் லாரியில் தீ விபத்து நள்ளிரவில் பரபரப்பு டேங்கர் லாரியில் தீ விபத்து நள்ளிரவில் பரபரப்பு
டேங்கர் லாரியில் தீ விபத்து நள்ளிரவில் பரபரப்பு
டேங்கர் லாரியில் தீ விபத்து நள்ளிரவில் பரபரப்பு
டேங்கர் லாரியில் தீ விபத்து நள்ளிரவில் பரபரப்பு
ADDED : மார் 14, 2025 05:35 AM

கடலுார்: கடலுாரில் நள்ளிரவில் டேங்கர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார்-விருத்தாசலம் சாலை, சுத்துக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்றிரவு 11:30 மணிக்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, காற்று பலமாக வீசவே தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு நிலவியது. அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் லாரி முழுதும் எரிந்து சேதமானது. கடலுார், முதுநகர் போலீசார், வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.