Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலெக்டர் அலுவலகத்தில் 26ல் விவசாயிகள் குறைகேட்பு

கலெக்டர் அலுவலகத்தில் 26ல் விவசாயிகள் குறைகேட்பு

கலெக்டர் அலுவலகத்தில் 26ல் விவசாயிகள் குறைகேட்பு

கலெக்டர் அலுவலகத்தில் 26ல் விவசாயிகள் குறைகேட்பு

ADDED : ஜூலை 23, 2024 12:07 AM


Google News
கடலுார் : விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26ம் தேதி கடலுாரில் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை தெரிவிக்கலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் மற்றும் கிசான் அட்டையுடன் காலை 10:00 மணிக்குள் தங்கள் பெயர், கோரிக்கை விபரம், துறை பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் நேரிடையாக வழங்கலாம். விவசாயிகள் கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், உரிய பதில் அளிக்கவும், அதன் மீது தொடர் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us