ADDED : மார் 13, 2025 12:42 AM
கடலுார் : இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த குப்பன்குளத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சக்திவேல்,30; இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி வயிற்றுவலியால் அவதியடைந்து வந்துள்ளார். நேற்று காலை ஏற்பட்ட வயிற்றுவலியால் மனமுடைந்த சக்திவேல், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.