ADDED : ஜூன் 03, 2024 06:04 AM

கடலுார், : கடலுாரில் தி.மு.க., கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகினறனர்.
கடலுார் , திருப்பாதிரிபுலியூர் தனம் நகர் பிரதான சாலையில் தி.மு.க.,வினர் இரும்பு கம்பத்தில் கட்சிக் கொடி அமைத்திருந்தனர், அதன் அருகில் உள்ள காலி மனை மற்றும் ரோடு ஓரம், அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை நகராட்சி அகற்றாததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இது குறித்து மாநகராட்சியில் புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதில் ஆத்திரமடைந்த தனம் நகர் வாலிபர்கள் நேற்று தி.மு.க., கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தினர்.
திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை செய்து, சந்தேக நபர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.