தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 03, 2024 05:58 AM
குள்ளஞ்சாவடி : தி.மு.க., சார்பில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, குறிஞ்சிப்பாடியில் காணொளியில் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் (தெற்கு), நாராயணசாமி (வடக்கு), வடலுார் நகரமன்றத் தலைவர் சிவக்குமார், நகர செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ஜெய்சங்கர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணை தலைவர் ராமர் மற்றும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.