/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கல் நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கல்
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கல்
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கல்
நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 15, 2024 11:48 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுப் பிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில் நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்க தினமலர் பட்டம் இதழை, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில இணைசெயலாளரும், மாவட்ட செயலாளருமான சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் சாம்பசிவம், சஞ்சீவிராயன் கோவில் ராஜா,விஜயகுமார் ஆகியோர் வழங்கினர். தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உடனிருந்தனர்.