/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாத நபர் சாவு; போலீசார் விசாரணை அடையாளம் தெரியாத நபர் சாவு; போலீசார் விசாரணை
அடையாளம் தெரியாத நபர் சாவு; போலீசார் விசாரணை
அடையாளம் தெரியாத நபர் சாவு; போலீசார் விசாரணை
அடையாளம் தெரியாத நபர் சாவு; போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 16, 2024 10:45 PM
நடுவீரப்பட்டு : பண்ருட்டியில் அடையாளம் தெரியாத நபர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி லிங்க்ரோடு டாஸ்மாக் கடை அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த 9ம் தேதி பண்ருட்டி வி.ஏ.ஓ., குமாரசாமி,46;தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வி.ஏ.ஓ., சம்பவ இடத்திற்கு சென்று மயங்கிய நிலையில் கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.