Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு

நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு

நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு

நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு

ADDED : மார் 11, 2025 08:43 AM


Google News
Latest Tamil News
பண்ருட்டி : பண்ருட்டியில் நெஞ்சுவலியால் சப் இன்ஸ்பெக்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுக்கா. பசுமாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 59; இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டத்தில் பணிபுரிந்த காந்தி, கடந்த 2024 செப்டம்பர் மாதம் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் போலீஸ் குடியிருப்பில் இருந்து, பணிக்கு கிளம்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காந்தி இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us