Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அஞ்சலகத்தில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க முகாம்

அஞ்சலகத்தில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க முகாம்

அஞ்சலகத்தில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க முகாம்

அஞ்சலகத்தில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்க முகாம்

ADDED : ஜூலை 02, 2024 05:35 AM


Google News
கடலுார்: பள்ளி மாணவர்கள் அரசு கல்வி உதவி தொகை பெறுவதற்காக, அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு;

கடலுார் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலங்களிலும், தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு வசதியாக, மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புதிய சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கான அஞ்சலக சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கை துவங்கி கொள்ளலாம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க குறைந்தபட்ச வைப்புத் தொகை ஏதும் தேவை இல்லை. 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்க தங்களின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை, பான் கார்டு, இரண்டு பாஸ் போர்ட் அளவு புகைப்படம் கொடுக்க வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கை துவங்க தங்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.

மேலும், ்முகாமில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. ஆதாரில் திருத்தம் செய்வதற்கு 50 ரூபாய் மற்றும் ஆதாரை புதுப்பிக்க 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க எவ்வித கட்டணமும் இல்லை. எனவே, பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us