/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 05, 2024 03:27 AM

கடலுார்: கடலுாரில் குடியிருப்புகள் மத்தியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் ராஜம் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.