Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் உழவர் சந்தை முன் நெரிசலை தடுக்க பேரிகார்டு

கடலுார் உழவர் சந்தை முன் நெரிசலை தடுக்க பேரிகார்டு

கடலுார் உழவர் சந்தை முன் நெரிசலை தடுக்க பேரிகார்டு

கடலுார் உழவர் சந்தை முன் நெரிசலை தடுக்க பேரிகார்டு

ADDED : ஜூலை 22, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
கடலுார் : கடலுார் உழவர் சந்தை முன் நடைபாதை கடைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது.

கடலுார் உழவர்சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தும் நிலை நீடித்து வந்தது.

இதேபோன்று, உழவர் சந்தை எதிரில், நடைபாதை வியாபாரிகள், சாலையோரத்தில் கடைகள் வைத்திருந்தனர்.

இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

இங்கு நெரிசலை தவிர்க்க, பேரிகார்டு வைக்குமாறு எஸ்.பி., ராஜாராம், போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, டி.எஸ்.பி., பிரபு மற்றும் டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் அங்கு, 26 பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து பெரிய அளவிலான பேரிகார்டுகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடை வைப்பதற்கு சிறிய அளவிலான பேரிகார்டுகளை போலீசார் நேற்று வைத்தனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us