Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜை

வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜை

வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜை

வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜை

ADDED : ஜூலை 08, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜையில் அம்மன் அருள்பாலித்தார்.

நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி,மகேஸ்வரி,இந்திராணி,வைஷ்ணவி,வராஹி,கெளமாரி,சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர்.வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.அம்மன்களுக்கு நவராத்திரி கொண்டாடுவது போல் வராஹிக்கு ஆஷாட நவராத்திரி நடப்பது சிறப்பாகும்.வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜைகள் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது.

தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் மாலையில் 1008 சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையும் நடக்கிறது.

இரண்டாம் நாள் விழாவில் வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை ராமு பூசாரி செய்து வருகிறார்.வரும் 13 ஆம் தேதி விளக்கு பூஜையும்,15 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும்,16 ஆம் தேதி வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us