ADDED : ஜூலை 11, 2024 04:31 AM
கடலுார் : கடலுாரில், ஓட்டல் கேஷியரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் வண்ணாரப்பாளையத்தில் ஓட்டல் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் சாப்பிட்டார். பில் பணம் கொடுக்காமல் சென்றார்.
இதனை ஓட்டல் கேஷியர் பார்த்திபன் கேட்டதற்கு, அவரை திட்டி தாக்கினார். படுகாயமடைந்த பார்த்திபன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர், தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியை சேர்ந்தவர்.
இதுகுறித்து புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.