Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

ADDED : ஜூன் 16, 2024 10:45 PM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மாயமான மனநிலை பாதித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகன் முரசொலிமாறன், 21. பத்தாம் வகுப்பு படித்துள்ளார். சற்று மனநிலை பாதித்த இவர், திடீரென வீட்டிலிருந்து வெளியேறி, சில நாட்களுக்கு பின்னர் திரும்பி வந்து விடுவது வழக்கம்.

அதுபோல், கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

அவரது தந்தை முத்துக்கருப்பன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான முரசொலிமாறனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us