Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

ADDED : ஜூலை 10, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
கடலுார்: சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கருப்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்,23; தொழிலாளி. இவர், கடந்த 2018ம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்து புத்துார் போலீசார், ராஜே ைஷ கைது செய்து, அவர் மீது கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமிரமேஷ், ராஜேஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அரசு நிதியில் ரூ.4 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us