/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீ குண்டத்தில் விழுந்து 2 பெண்கள் காயம் தீ குண்டத்தில் விழுந்து 2 பெண்கள் காயம்
தீ குண்டத்தில் விழுந்து 2 பெண்கள் காயம்
தீ குண்டத்தில் விழுந்து 2 பெண்கள் காயம்
தீ குண்டத்தில் விழுந்து 2 பெண்கள் காயம்
ADDED : ஜூன் 22, 2024 04:52 AM
விருத்தாசலம், ; விருத்தாசலம் அருகே நடந்த தீ மிதி திருவிழாவில், பெண்கள் இருவர் தீ குண்டத்தில் விழுந்து காயமடைந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த பரவளூர் காலனியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து தினசரி காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த விஜி, 38; ரம்யா, 22 ஆகியோர் தீ குண்டத்தில் தவறி விழுந்தில், காயமடைந்தனர். இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.