Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

ADDED : செப் 02, 2025 08:58 PM


Google News
வால்பாறை; திருமணமாகாத விரக்தியில் இருந்த எஸ்டேட் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட்டை சேர்ந்தவர் சிவா,34. எஸ்டேட் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகாததால் நாள் தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவா, திருமணமாகாத விரக்தியில் சமையல் அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாய் ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us