Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதிய இடவசதியின்றி கூடும் வாரச்சந்தை

 போதிய இடவசதியின்றி கூடும் வாரச்சந்தை

 போதிய இடவசதியின்றி கூடும் வாரச்சந்தை

 போதிய இடவசதியின்றி கூடும் வாரச்சந்தை

ADDED : டிச 01, 2025 01:34 AM


Google News
பொள்ளாச்சி: நெடுஞ்சாலை ஓரத்தில் போதிய இடவசதியின்றி அமைக்கப்படும் வாரச்சந்தையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், விபத்து அபாயம் அதிகரிக்கிறது.

பொள்ளாச்சியில் இருந்து செல்லும் முக்கிய வழித்தடத்தில், வாரச்சந்தை அமைக்கப்படுகிறது. குறிப்பாக, ஊஞ்சவேலம்பட்டி, மின்நகர், நல்லுார், வஞ்சியாபுரம்பிரிவு, ஐஸ்வர்யாநகர் என, பல இடங்களில் நெடுஞ்சாலை ஓரத்தில் வாரச்சந்தை அமைக்கின்றனர்.

சந்தையில், அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், காய்கறி, மளிகை பொருட்களை சில்லரை வியாபாரம் செய்கின்றனர். இந்த சந்தைக்கு வருவோர் தங்களது வாகனங்களை, ரோட்டோரம் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.

வழித்தடத்தில், செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள், பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, வாரச்சந்தையின்போது, ரோட்டோரம் ஒன்று கூடி நிற்கும் மக்கள், சாலையில் கடக்கும் வாகனங்களை கண்டு கொள்வதும் கிடையாது.

பெண்கள் மற்றும் குழந்தைகள், திடீரென சாலையை கடக்க முற்படுவதால், விபத்தும் ஏற்படுகிறது. போதிய அளவிலான திறந்த வெளியில், சந்தை அமைக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us