Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட் கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை

 'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட் கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை

 'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட் கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை

 'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட் கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை

ADDED : டிச 01, 2025 01:34 AM


Google News
பொள்ளாச்சி: 'க்யூ ஆர் கோடு' வாயிலாக பஸ்களில் டிக்கெட் வழங்கப்பட்டாலும், அதனை, 10 சதவீதம் பயணியர் மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இயங்கும் மொபசல் மற்றும் டவுன் பஸ்களில், 'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. பயணியரும் ஜிபே, போன்பே, பாரத் பே, பேடிஎம் வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெறுகின்றனர்.

இதனால், கண்டக்டரிடம் சில்லறை பிரச்னை சற்று குறைந்தது. இருப்பினும், இயக்கப்படும் வழித்தடத்திற்கு ஏற்றாற்போல, 'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட் பெறும் பயணியர் எண்ணிக்கை மாறுபடுகிறது.

அந்தந்த பஸ்சின் ஒரு நாள் கலெக் ஷனை ஒப்பிடுகையில், 10 சதவீதத்திற்கும் குறைந்த பயணியரே டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆர்வம் காட்டுவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:

'க்யூ ஆர் கோடு' வாயிலாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதி, பயணியர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இருப்பினும், வெளியூர் செல்லும் பஸ்களில், தொலைதுாரம் பயணிப்போர் மட்டுமே டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

பஸ்சில் பயணிக்கும், 90 சதவீதம் பேர், பணம் அளிக்கின்றனர். டவுன் பஸ்களில் அதிகபட்சம் 15 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் உள்ளதால், 'க்யூ ஆர் கோர்டு' வாயிலாக பணம் செலுத்த பயணியர் முற்படுவதில்லை.

இதுகுறித்து, கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us