ADDED : செப் 14, 2025 11:34 PM
கோவை; தி.மு.க., முப்பெரும் விழாவை முன்னிட்டு, மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில், மசக்காளிபாளையம் ரோடு, பாலன் நகர் வளைவு அருகே, சுற்றுப்புறச் சூழல், ரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொது மக்கள் உள்ளிட்டோருக்கு, 4 கி.மீ., 6 கி.மீ., 10 கிமீ., ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.