Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆவாரம் குளத்தில் துளிர் விடும் மரங்கள்

 ஆவாரம் குளத்தில் துளிர் விடும் மரங்கள்

 ஆவாரம் குளத்தில் துளிர் விடும் மரங்கள்

 ஆவாரம் குளத்தில் துளிர் விடும் மரங்கள்

ADDED : டிச 01, 2025 01:24 AM


Google News
அன்னுார்: கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், எல்லப்பாளையம் பிரிவில், 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில், கரைகளை பலப்படுத்துதல், துார் வாருதல், உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஜெர்மனி நிறுவனமான 'ஜுரன்ஸ்கி' சார்பில், 300 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. நிறுவன சேர்மன் ஜுரன்ஸ்கி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி பராமரிப்பு பணி செய்யப்பட்டது.

விழாவில், நிறுவன நிர்வாகிகள், ரோட்டரி கோயம்புத்தூர் மாவட்டம் சாய் சிட்டி 3206 நிர்வாகிகள், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜ் மற்றும் ஆவாரம் குளம் பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us