Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இழுத்தடிக்கும் மின்வாரியம் விண்ணப்பித்தோர் 'ஷாக்'

 இழுத்தடிக்கும் மின்வாரியம் விண்ணப்பித்தோர் 'ஷாக்'

 இழுத்தடிக்கும் மின்வாரியம் விண்ணப்பித்தோர் 'ஷாக்'

 இழுத்தடிக்கும் மின்வாரியம் விண்ணப்பித்தோர் 'ஷாக்'

ADDED : டிச 01, 2025 01:25 AM


Google News
அன்னுார்: கரியாம்பாளையம், துணை மின் நிலையத்துக்கு உட்பட்டு, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 5,000க்கும் மேற்பட்ட குறைந்த அழுத்த மற்றும் உயர் அழுத்த மின் இணைப்புகள் உள்ளன.

இதில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டுவோர் கட்டுமான பணி துவங்கும்போது தற்காலிக மின் இணைப்பு பெறுகின்றனர். ஒரு யூனிட்டுக்கு 13 ரூபாய் வரை கட்டணம் செலுத்துகின்றனர். கடை அல்லது வீடு கட்டி முடித்து அதற்கான சான்றுடன் கரியாம்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தால் சாதாரண கட்டணத்திற்கு மாற்றப்படும். இதனால் மின் கட்டணம் குறையும். இதற்காக விண்ணப்பித்தால் பல மாதங்கள் இழுத்தடிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.

கரியாம்பாளையம் பகுதி மக்கள் கூறுகையில், 'அனைத்து சான்றுகளுடன் கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்தால் தற்காலிக மின் இணைப்பில் இருந்து நிரந்தர மின் இணைப்புக்கு மாற்றுவதற்கு தாமதிக்கின்றனர். உள்நோக்கத்துடன் இழுத்தடிக்கின்றனர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். நான்கு மடங்கு கூடுதலாக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us