Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறையில் கடுங்குளிர்: சுற்றுலா பயணியர் தவிப்பு

 வால்பாறையில் கடுங்குளிர்: சுற்றுலா பயணியர் தவிப்பு

 வால்பாறையில் கடுங்குளிர்: சுற்றுலா பயணியர் தவிப்பு

 வால்பாறையில் கடுங்குளிர்: சுற்றுலா பயணியர் தவிப்பு

ADDED : டிச 01, 2025 01:47 AM


Google News
வால்பாறை: வால்பாறையில் நிலவும் கடுங்குளிரால் சுற்றுலா பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, 8 முறை நிரம்பியது. தொடர் மழையால், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை கடந்த மாதம் விடைபெற்ற நிலையில், வடகிழக்குப் பருவமழை துவங்கியது. சாரல்மழையாக பெய்வதால், எஸ்டேட்களில் காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் கடுங்குளிர் நிலவுகிறது.

வால்பாறையில் நிலவும் கடுங்குளிரால் எஸ்டேட் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us