/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தரம் குறைந்ததால் இளநீர் விலை சரிவு தரம் குறைந்ததால் இளநீர் விலை சரிவு
தரம் குறைந்ததால் இளநீர் விலை சரிவு
தரம் குறைந்ததால் இளநீர் விலை சரிவு
தரம் குறைந்ததால் இளநீர் விலை சரிவு
ADDED : செப் 22, 2025 10:10 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலையில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட மூன்று ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வாரத்தை விட மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, 40 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை 17,000 ரூபாய்.
வடமாநிலங்களில் தொடர் கனமழை, இளநீர் வரத்து கணிசமாக அதிகரிப்பு, பொள்ளாச்சி பகுதிகளில் இளநீர் தரம் குறைந்து காணப்படுவதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உரிய பூச்சி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காததால், இளநீர் தரம் குறைந்து காணப்படுகிறது. இதுவும் விலை குறைப்புக்கு காரணமாகும். எனவே, விவசாயிகள் உரிய பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.