Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருவமழை துவங்கியாச்சு; குடிநீரை காய்ச்சி குடியுங்க!

பருவமழை துவங்கியாச்சு; குடிநீரை காய்ச்சி குடியுங்க!

பருவமழை துவங்கியாச்சு; குடிநீரை காய்ச்சி குடியுங்க!

பருவமழை துவங்கியாச்சு; குடிநீரை காய்ச்சி குடியுங்க!

ADDED : அக் 22, 2025 11:00 PM


Google News
வால்பாறை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை பெய்கிறது. தொடர் மழையால் இங்குள்ள, ஆறு மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பருவமழையினால் வால்பாறையில் பனிமூட்டம் அதிகரித்து, சீதாஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் பருவமழை பெய்வதால். காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும், கடுங்குளிரும் நிலவுகிறது. மக்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சிதோஷ்ணநிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us