Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருவமழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

பருவமழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

பருவமழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

பருவமழை பெய்வதால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

ADDED : மே 21, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
வால்பாறை, ;வால்பாறையில், பருவமழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில் கோடை மழையை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இதனால், கடந்த சில மாதங்களாக துளிர்விடாமல் இருந்த தேயிலை செடிகள் தற்போது பருவமழைக்கு துளிர்விடத்துவங்கியுள்ளது. தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கபட்டுள்ளதால், தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில் உள்ள, 56 எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு பயிரிடப்பட்டுள்ளன. பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையில் பருவமழைக்கு இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலைக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளதோடு, சூரிய ஒளியும் கிடைக்கிறது. இதனால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஆகஸ்ட் மாதம் வரை தேயிலை வரத்து அதிகம் இருக்கும். இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us