Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

ADDED : மே 22, 2025 12:34 AM


Google News
கோவை; தமிழக அரசு பள்ளிகளில் கல்வி பயின்ற, பிளஸ் 1 முடித்த மாணவ,- மாணவிகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

 தமிழக அரசு, 2023 -- 2024ம் கல்வியாண்டில், பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், திறன் தேடல் தேர்வு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 2024 -- 2025ம் கல்வியாண்டுக்கான தேர்வும், அண்மையில் நடைபெற்று முடிந்தது.

மாநிலம் முழுவதும் தேர்ச்சி பெற்ற, தற்போது பிளஸ் 1 முடித்த, 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முகாம், வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, கோவை மாவட்டம் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில், உண்டு உறைவிட முகாமாக நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us